Wednesday, April 17, 2013

அவரைக்காய் பொரியல்



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவரைக்காய் - 150 கிராம்
  2. துவரம் பருப்பு - 3 மேஜைக்கரண்டி
  3. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. துவரம் பருப்பை 50 மில்லி தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அவரைக்காயையும், வெங்காயத்தையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                  
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். 
  3. வெங்காயம் பாதி வதங்கியதும் அவரைக்காய், ஊற வைத்த பருப்புத் தண்ணீர், பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.                                                                
  4. காய் நன்கு வெந்தவுடன் சாம்பார் பொடி சேர்த்து 1 நிமிடம் வரை நன்கு கிளறி தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கி விடவும். அவரைக்காய் பொரியல் ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...