Wednesday, September 30, 2015

சேப்பங்கிழங்கு ப்ரை / Sepang Kizangu Fry

வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். இப்போது சேப்பங்கிழங்கை வைத்து சிறிது வித்தியாசமாக சேப்பங்கிழங்கு ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம் !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சேப்பங்கிழங்கு - 8
  2. தக்காளி -1
  3. மல்லித்தழை - சிறிது 
  4. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி 
  8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2.  சோம்பு - 1/2 தேக்கரண்டி 
  3.  பெரிய வெங்காயம் - 1
  4.  கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. ஆறிய பிறகு தோலுரித்து வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியே ஒரு தட்டில் வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள்,  மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் பொரித்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி.

Wednesday, September 23, 2015

பீட்ரூட் அல்வா / Beetroot Halwa

தேவையான பொருள்கள் -
  1. துருவிய பீட்ரூட் - 1 
  2. காய்ச்சிய பால் - 100 மில்லி 
  3. சீனி - 50 கிராம் 
  4. நெய் - 4 மேஜைக்கரண்டி 
  5. முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முத்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே  கடாயில்  ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பீட்ரூட்டின் ஈரத்தன்மை போகும் வரை நன்கு கிளறவும்.
  3. ஈரத்தன்மை போனதும் பாலை சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும்.
  4. பால் நன்கு வற்றியவுடன் சீனி சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, மீதமுள்ள நெய் இரண்டையும் சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.

Sunday, September 20, 2015

ப்ரைட் சிக்கன் பிரியாணி / Fried Chicken Biriyani



 தேவையான பொருட்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2 அல்லது 3
  2. தக்காளி - 1
  3. புதினா - 1/2 கப் 
  4. கொத்தமல்லி தழை - 1/2 கப்
  5. மிளகாய் தூள் - 1 1/2 மேஜைக்கரண்டி
  6. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  7. சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா தூள் - 2 மேஜைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  10. தயிர் - 1/2 கப் 
  11. உப்பு - தேவைக்கேற்ப 
  12. பட்டை - 2
  13. கிராம்பு - 3
  14. பிரியாணி இலை - 3
  15. நெய் - 2 மேஜைக்கரண்டி
  16. பால் - 4 மேஜைக்கரண்டி
சிக்கன் பொரிப்பதற்கு -
  1. சிக்கன் - 400 கிராம்
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  7. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கேற்ப
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சாதம் வடிக்க -
  1. பாஸ்மதி அரிசி - 500 கிராம்
  2. கிராம்பு - 5
  3. பட்டை - 2
  4. ஏலக்காய் - 4
  5. பிரியாணி இலை - 4
  6. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை -
  1. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடிக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், மஞ்சள் தூள்,  தயிர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் கட் செய்து கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி தலை, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. சிக்கன் ஊறியதும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  4. சூடானதும் கடாய் கொள்ளும் அளவிற்கு சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேக வைத்து சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
  5. பிறகு அதே எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு நன்றாக பொரித்துக் கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 90% வெந்ததும் அதை வடித்து விடவும்.
  7. பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
  8. ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் (சிக்கனை பொரித்த எண்ணெயை உபயோகபடுத்தலாம்) மற்றும் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  9.  பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  10. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
  11. அடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
  12. பிறகு தயிர், பாதி கொத்தமல்லி மற்றும் புதினா தழை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
  13. இப்பொது வறுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறவும்.
  14. அடுப்பை சிம்மில் வைத்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். அதன் மேல் பொறித்த வெங்காயம் மற்றும் மீதமுள்ள புதினா, கொத்தமல்லி தழை சேர்க்கவும். அதன் மேல் பால் ஊற்றவும்.
  15. பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
  16. 20 நிமிடம் வரை நன்கு குறைந்த தீயில் வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும். சுவையான ப்ரைட் சிக்கன் பிரியாணி ரெடி.

Tuesday, September 15, 2015

விநாயகர் சதூர்த்தி


உங்கள் அணைவருக்கும்  என்னுடைய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !

விநாயகர் சதூர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வர இருக்கிறது.

                                           விநாயகர் துதி

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்க கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா !

விநாயகர் இந்துக்களின் முழு முதற் கடவுளாக விளங்குகிறார். யானைத்தலையும், பெரிய வயிறும் , மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பான அம்சங்களாகும்.

விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் ஆவார். விநாயகரை மரத்தடி முதல் மணி மண்டபம் வரை எங்கும் காணலாம்.

எப்போதும் எதையும் தொடங்கும் முன் பிள்ளையாரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. விநாயகர் சதூர்த்தி அன்று 7 பிள்ளையார் கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது சொல்வார்கள்.

பிள்ளையாருக்கு மோதக கொழுக்கட்டை, சுண்டல், கோதுமை அப்பம் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் பிள்ளையாருக்கு பிடித்ததை நாம் வீட்டில் செய்து அவருக்கு படைத்து நாம் விநாயகரை வழி படுவோம்.

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் -

  1. மோதக கொழுக்கட்டை 
  2. கொண்டைக்கடலை சுண்டல் 
  3. கடலைப்பருப்பு சுண்டல் 
  4. பாசிப்பயறு சுண்டல் 
  5. வேர்க்கடலை சுண்டல் 
  6. கோதுமை அப்பம் 

Friday, September 11, 2015

பீஸ் மசாலா / Peas Masala

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பிரஷ் பட்டாணி - 1 கப் ( 200 கிராம் )
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. முந்திரிப்பருப்பு - 10
  4. கசகசா - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
  1. வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
செய்முறை -
  1. கசகசாவை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
  6. பிறகு பட்டாணி சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு கலவையை சேர்த்து மசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து  அடுப்பை அணைக்கவும்.
  8. பிறகு பாத்திரத்திற்கு  மாற்றி விடவும். சுவையான பீஸ் மசாலா ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, September 7, 2015

மிளகு காளான் / Pepper Mushroom


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பட்டர் காளான் - 250 கிராம் 
  2. பூண்டுப்பல் - 10
  3. மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. காளானை நன்கு சுத்தப்படுத்தி நீள வாக்கில் நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கவும்.
  3. பூண்டு வதங்கியதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு அதனுடன் காளானை சேர்த்து நன்கு கிளறவும். காளான் வேகும் வரை இடை இடையே கிளறி கொண்டே இருக்கவும்.
  6. காளான் வெந்ததும் மல்லித்தழை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மிளகு  காளான் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...