Thursday, September 28, 2017

தக்காளி கொத்சு / Tomato Gotsu



பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நன்கு பழுத்த தக்காளி - 6
  2. முந்திரிபருப்பு - 10
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். முந்திரிப்பருப்பை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து அரை கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தக்காளிப்பழங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அடுப்பை அணைத்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
  3. 5 நிமிடம் ஆனதும் தண்ணீரை வடித்து விட்டு தக்களிப்பழங்களை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போடவும். பிறகு தக்காளியை தோலுரித்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்..
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  6. பிறகு  அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் உப்பு  சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.இறுதியில் முந்திரிப்பருப்பு பொடி சேர்த்து கொத்சு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
  7.  சுவையான தக்காளி கொத்சு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Saturday, September 23, 2017

கெட்டித்தயிர் / Thick Curd


தேவையான பொருள்கள் -
  1. பால் - 1/2 லிட்டர் 
  2. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
  3. சீனி - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். பால் பொங்கி வரும் போது அடுப்பை சிம்மில்  வைத்து  5 நிமிடம்.கழித்து அணைக்கவும்.
  2. பால் லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு மேஜைக்கரண்டி தயிரை ஊற்றி நன்றாக கலக்கி விடவும். பிறகு ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து நன்றாக கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
  3. 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் தயிர் கெட்டியாக உறைந்து இருக்கும். கெட்டித்தயிர் ரெடி.

Thursday, September 14, 2017

இட்லி போண்டா / Idly Bonda



தேவையான பொருள்கள் -
  1. இட்லி - 3
  2. கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. உப்பு - சிறிது 
  7. தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி 
  8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. இட்லிகளை  உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு உருண்டைகளை போடவும்.
  4. ஒரு புறம்  வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இட்லி போண்டா ரெடி.
குறிப்பு -
  1. மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். மூன்று இட்லிக்கு 12 போண்டாக்கள் வரை வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...