Thursday, July 26, 2018

முட்டை கீமா / Egg Keema



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப் 
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பிரிஞ்சி இலை - 1
  3. பட்டை - 1 இன்ச் 
  4. கிராம்பு - 2
  5. அன்னாசிப்பூ - 1
  6. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர்  கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடங்களில் முட்டைகள் வெந்து விடும்.
  2. வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும். பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
  5. பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள்  மஞ்சள் தூள்,  கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 
  6. மசாலா வாடை போனதும் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல்,  சேர்க்கவும். இறுதியில் மல்லித்தழை  சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். 
  7. சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.

Tuesday, July 24, 2018

வேர்க்கடலை சட்னி இரண்டாவது முறை / Peanut Chutney



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வறுத்த வேர்க்கடலை - 3/4 கப் 
  2. பொட்டுக்கடலை - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 2
  4. புளி - சிறிய கோலி அளவு 
  5. பூண்டுப்பல் - 1
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை,  பூண்டுப்பற்கள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி விடவும். 
  4. இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.

Wednesday, July 18, 2018

வடகறி / Vada Curry



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 1/2 கப் 
  2. மிளகாய் வத்தல் - 2
  3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி 
  4. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
  5. தக்காளி - 1
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  7. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  8. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  11. உப்பு - தேவையான அளவு 
  12. மல்லித்தழை - சிறிது 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் மிளகாய் வத்தல்,  பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கி வைக்கவும்.
  3. தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 3/4 கப் அளவுக்கு பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளாக தட்டி சுட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறியதும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
  5. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை  வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில்  மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் உப்பும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும். 
  8. மசாலா வாடை போனதும் தேங்காய் பால் சேர்க்கவும். பிறகு அதனுடன் வடை துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். 
  9. இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.சுவையான வடகறி ரெடி. இட்லிக்கு  சைட் டிஷ்சாக வைக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...