Monday, August 31, 2015

வாழைக்காய் பொடி கறி / Vazhakkai Podi Curry


 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் - 1
  2. புளி - நெல்லிக்காய் அளவு 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
வறுத்து பொடிக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  3. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பிறகு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  4. புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வாழைக்காயை இரு துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  5. ஆறிய  பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. பிறகு அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 
  8. இறுதியில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைக்காய் பொடி கறி ரெடி.

Monday, August 24, 2015

பீன்ஸ் பருப்பு உசிலி / Beans Paruppu Usili

பீன்ஸ் பருப்பு உசிலி பாரம்பரிய தென் இந்திய உணவுப் பொருளாகும். இந்த பருப்பு உசிலி மிகவும் சுவையாக இருக்கும். இனி பீன்ஸ் பருப்பு உசிலி எப்படி செய்வதென்று பார்ப்போம் !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீன்ஸ் - 100 கிராம் 
  2. துவரம்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. மிளகாய் வத்தல் - 3
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற  வைக்கவும்.
  2. ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதோடு காயத்தூள், மிளகாய் வத்தல், சீரகம், சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு பருப்பு கலவையை வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  4. ஆறிய பிறகு கையால் உதிர்க்கவும் அல்லது மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் கலவை மென்மையாகி விடும்.
  5.  பீன்ஸை  பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில்  50 மில்லி தண்ணீர் ஊற்றி அதோடு நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  6. அடுப்பில் அதே  கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
  8. பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மற்றும் பீன்ஸை  சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி.

Thursday, August 20, 2015

மசால் கடலை / Masala Kadalai / Masala Peanuts


தேவையான பொருள்கள் -
  1. பச்சை நிலக்கடலை - 200 கிராம் 
  2. கடலை மாவு - 50 கிராம் 
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிலக்கடலை, கடலைமாவு, மிளகாய் தூள், உப்பு கலந்து உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு மாவுடன் கடலை சேரும் படி நன்றாக பிசிறிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்துள்ள கடலையை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  3. மீதமுள்ள கடலை கலவையையும் இதே முறையில் பொரித்து எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  4. எண்ணெய் உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான மசால் கடலை ரெடி.

Monday, August 17, 2015

பரோட்டா / Parotta


பரிமாறும் அளவு - 3 நபருக்கு (10 பரோட்டா)

 தேவையான பொருட்கள் -
  1. மைதா - 750 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு
  3. முட்டை - 1
  4. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
  5. பால் - 125 ml
  6. தண்ணீர் - தேவைக்கேற்ப 
செய்முறை 
  1. முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. அதில் முட்டை மற்றும் வெதுவெதுப்பான பால் சேர்த்து பிசையவும்.
  3. பிறகு தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
  4. ஒரு நனைந்த துணியை வைத்து மூடி மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மறுபடி 5 - 10 நிமிடம் வரை பிசையவும். மறுபடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. பிறகு அதை கொஞ்சம் பெரிய  உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டும் பொது கொஞ்சம் நன்றாக அழுத்தம் கொடுத்து உருட்டி கொள்ளவும். கிட்டதட்ட 10 உருண்டைகள் வரை வரும். லேசாக எண்ணெயை மேலே தடவி 15 நிமிடம் ஊற விடவும்.
  6. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். பூரி கட்டை மற்றும் தேய்க்கும் கல் அனைத்திலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  7. ஒரு உருண்டை மாவை எடுத்து எவ்வுளவு மெலிதாக பூரி கட்டையால் தேய்க்க முடியுமோ அது வரை தேய்க்கவும். தேய்க்கும் பொது மாவு சுருங்கினால் எண்ணெய் தடவி கொள்ளவும். பிறகு கையை வைத்து எல்லா ஓரங்களிலும் முடிந்த அளவுக்கு இழுத்து விடுங்கள். 
  8. பிறகு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படுமாறு தடவி விடுங்கள். பிறகு கொஞ்சம் 1/2 மேஜைக்கரண்டி மைதா மாவை தூவி தடவி விடுங்கள். பிறகு அதை விசிறி போல் மடிக்கவும்.
  9. பிறகு அதை சுருட்டி விடவும். லேசாக எண்ணெய் மேலே தடவி ஈர துணியால் மூடி விடவும்.
  10. அணைத்து உருண்டையும் இவ்வாறு செய்து ஈர துணியால் மூடி விடவும்.
  11. அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு படுத்திக் கொள்ளவும். ஒரு சுருட்டிய உருண்டையை எடுத்து பூரி கட்டையால் தேய்த்துக் கொள்ளவும்.
  12. தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் நன்றாக சிவந்து வேகும் வரை மாற்றி போட்டு எடுத்து விடுங்கள்.
  13. மூன்று பரோட்டா போட்டதும் எல்லாம் சேர்த்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள்.
  14. சுவையான பரோட்டா ரெடி. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு அல்லது வெஜ் குருமாவுடன் சேர்த்து சாப்பிடவும்.

Thursday, August 13, 2015

சிக்கன் ப்ரை / Chicken Fry


தேவையான பொருட்கள் -
  1. எலும்புடன் உள்ள பெரிய சிக்கன் துண்டுகள் - 8
  2. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
ஊற வைப்பதற்கு -
  1. சின்ன வெங்காயம் - 5
  2. மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 1 
  4. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரக பொடி - 1 தேக்கரண்டி 
  6. சோம்பு - 1 தேக்கரண்டி 
  7. பட்டை - 1
  8. கிராம்பு - 4
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  10. தயிர் - 1/4 கப் 
  11. எலும்பிச்சை சாறு  - 2 மேஜைக்கரண்டி 
  12. கொத்தமல்லி தழை - சிறிது 
  13. கறிவேப்பில்லை - சிறிது 
  14. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அணைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு தண்ணீர் இல்லாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைபட்டால் சிறிது மட்டுமே தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் சிறிதும் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். கத்தியால் சிக்கனில் கீறல் போட்டுக் கொள்ளவும்.  
  3. அதன் மேல் அரைத்த கலவையை சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்றாக தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விடவும்.
  4. ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சிக்கன் துண்டுகளை போட்டு வறுக்கவும்.
  5. சிம்மில் வைத்து எல்லா புறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விடவும். வெந்து நன்றாக சிவந்ததும் சிக்கனை எடுத்து விடவும்.
  6. அடுத்து மற்ற சிக்கன் துண்டுகளை போடும் போது  எண்ணெயில் உள்ள மசாலா கலவையை எடுத்து விட்டு போடவும்.
  7. சுவையான சிக்கன் ப்ரை ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...