தேவையான பொருள்கள் -
- மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
- கொத்தமல்லி - 300 கிராம்
- சீரகம் - 100 கிராம்
- துவரம் பருப்பு - 50கிராம்
- கடலைப் பருப்பு - 50 கிராம்
- மிளகு - 25 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
- கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.
- வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும்.
- இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.
- காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment