Sunday, March 17, 2013

இனிப்பு அவல் புட்டு

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவல் - 1 கப்
  2. சீனி - 10 மேஜைக்கரண்டி
  3. தண்ணீர் -1 1/2 கப்
  4. தேங்காய் துருவல் - 3/4 கப்  (75 கிராம் )
  5. உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து அவலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
  2. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சுட வைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு  சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனோடு தேங்காய் துருவலையும் போட்டு கிளறவும்.
  3. அதன் பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். .
  4. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் அவல் புட்டு மற்றும் சீனியைப் போட்டு கிளறவும். சுவையான அவல் புட்டு ரெடி.

5 comments:

  1. செய்து ருசித்ததுண்டு.

    ReplyDelete
  2. சர்க்கரைக்கு பதில் வேறு எது பயன்படுத்தலாம்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...