Tuesday, March 19, 2013

இட்லி சாம்பார்

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 50 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. மிளகுத் தூள் -  1/2 தேக்கரண்டி
  6. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
  9. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  4. பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  5. கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2 நிமிடம்  ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...