Friday, March 15, 2013

ரவை உப்புமா


பரிமாறும் அளவு - 2 நபருக்கு                                                                        

தேவையான பொருள்கள் -
  1. ரவை - 1 கப்
  2. தண்ணீர் - 1 1/2 கப்
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. கடுகு - சிறிது
  2. கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  3. பெரிய வெங்காயம் -1
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
  6. கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள்
  7. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி                               
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும்.
  2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் கடலை பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஒவ்வொன்றாக போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.                            
  3. பின் அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். உப்பை சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவையை போட்டு கை விடாமல் கிளற வேண்டும். 10 நிமிடம் வரை கிளறியவுடன் ரவை  நன்கு வெந்த பின் இறக்கி விடவும். ரவை உப்புமா ரெடி.                               

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...