Friday, March 27, 2015

தக்காளி ரசம் / Tomoto Rasam


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 2
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. கறிவேப்பிலை - சிறிது 
                                                                                                    
அரைக்க -
  1. மிளகு - 1 மேஜைக்கரண்டி 
  2. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
  3. பூண்டுப்பல் தோலுடன் - 6                          
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. முதலில் தக்காளியை கையால் மசித்து வைக்கவும். பிறகு தக்காளியுடன் 300 மில்லி தண்ணீர், மஞ்சள்தூள், காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
                                                           
                                                                                                   
  2. மிளகு, சீரகம், பூண்டுப்பல் மூன்றையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
                                                                                    
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய்வத்தலை போடவும். பிறகு கடுகு போடவும்.
  4. கடுகு வெடித்தவுடன் தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு கலவையை சேர்த்து கிளறி அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றவும். ரசம் நுரை கூடி வரும் பொழுது மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.                                                                                     
  5. பிறகு ரசத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி ரசம் ரெடி.

Monday, March 23, 2015

பூசணிக்காய் சாம்பார் / Pumpkin Sambar


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம் 
  2. பூசணிக்காய் - சிறிய துண்டு 
  3. தக்காளி - 1
  4. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. புளி - சிறிது 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 
                                                                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு -  1/2 தேக்கரண்டி 
  4. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. சின்ன வெங்காயம் - 5
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாகவும், சின்ன வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டி வைக்கவும்.                                                                                     
  2. புளியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து பிறகு கரைத்துக் கொள்ளவும். 
  3. பருப்பை நன்கு கழுவி குக்கரில் பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து பிறகு அடுப்பை அணைக்கவும்.
  5. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை நன்கு மசித்து வைக்கவும்.
                                                                               
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
  7. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகள், தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.                                  
  9. பிறகு அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு புளித்தண்ணீர்  மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.            
  10. மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.          
  11. இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூசணிக்காய் சாம்பார் ரெடி.                                                                                   
         

Tuesday, March 17, 2015

சீனிக்கிழங்கு சிப்ஸ் / Sweet Potato Chips


தேவையான பொருள்கள் -
  1. சீனிக்கிழங்கு பெரியது - 1
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
  4. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. சீனிக்கிழங்கின் தோலை சீவி விட்டு சிப்ஸ் வெட்டும் பலகையில் வைத்து சீவிக் கொள்ளவும்.
                                                                       
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீவி வைத்திருக்கும் சிப்ஸ்களை எடுத்து போடவும்.
                                                                       
  3. இரு புறமும் பொன்னிறமானதும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா சிப்ஸ்களையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும்.
                                                                      
  4. பிறகு சிப்சுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கையால் எல்லா இடங்களிலும் படும் படி கலந்து விடவும். 
  5. சுவையான சீனிக்கிழங்கு சிப்ஸ் ரெடி. சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.                                                           

Wednesday, March 11, 2015

காலிபிளவர் மிளகு பொரியல் / Cauliflower Pepper Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -                                                               
  1. காலிபிளவர் - 1  
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு    
  7. மல்லித்தழை - சிறிது                                                                                            
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 2
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. காலிபிளவரை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும். பிறகு சிறிய பூக்களாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.                                                                    
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                           
  3. வெங்காயம் பொன்னிறமானதும் காலிபிளவருடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரும் சேர்த்து காலிபிளவர் வேகும் வரை நன்கு கிளறி விடவும். 
                                                                               
  4. காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்.
                                                                            
  5. இறுதியில் மல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காலிபிளவர் மிளகு ரோஸ்ட் ரெடி. 

Friday, March 6, 2015

அசோகா அல்வா / Ashoka Halwa

நான் வலைபூ ஆரம்பித்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 231 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்துக்களை சொன்ன நட்புள்ளங்களுக்கும்,  சில பதிவுகளை செய்து பார்த்து கருத்துக்களை சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது வலைப்பூவை மென்மேலும் வளர செய்த உங்கள் அணைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாம் ஆண்டு தொடக்கத்திற்கு அசோகா அல்வா ஸ்வீட் பதிவு !!!
தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 100 கிராம் 
  2. சீனி - 300 கிராம் 
  3. கோதுமை மாவு - 2 மேஜைக்கரண்டி 
  4. நெய் - 50 கிராம் 
  5. முந்திரிப் பருப்பு - 10 
  6. அல்வா கலர் (ப்ரவுன் கலர்) - 1/4 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  2. பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்த பருப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பருப்பு நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து விட்டு பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.  
  4. அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்க்கவும். வாசம் வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
  5. பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  6. அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது  சீனி, கலர்  பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும். 
  7. அல்வா பவுடர் கிடைக்காவிட்டால் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம். சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.
  8. பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.

Sunday, March 1, 2015

பக்கோடா குழம்பு / Pakkoda Kuzambhu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பக்கோடா - 100 கிராம் 
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு                                                                 
லேசாக வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 3
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. பட்டை - 1 இன்ச் அளவு 
  5. கிராம்பு - 2
                                                                  
அரைக்க - 
  1. தேங்காய் துருவல்  - 50 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மல்லித்தழை - சிறிது 
                                                                          

தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  3. கிராம்பு  - 1
  4. வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் போட்டு சூடானவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
                                                                                                                        
  3. தேங்காய், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் திரித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். 
                                                                   
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். 
  7. குழம்பு சிறிது ஆறியவுடன் பக்கோடா துண்டுகளை சேர்க்கவும். உடனே கலக்க வேண்டாம். குழம்பு சூடாக இருக்கும் போது பக்கோடாவை போட்டால் பக்கோடா கரைந்து விடும். பக்கோடாவை குழம்பில் சேர்த்து உடனே கலக்கி விட்டாலும் பக்கோடா கரைந்து விடும்.
  8. லேசாக கடாயை ஆட்டி விட்டு பக்கோடாவை குழம்பில் ஊற விடவும். பிறகு பரிமாறவும். சுவையான பக்கோடா குழம்பு ரெடி.                      
மெது பக்கோடா ரெசிபி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.     
Related Posts Plugin for WordPress, Blogger...