Saturday, April 13, 2013

பருப்பு மசியல்


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு
  3. காயம் - 1/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி                    
அரைக்க -
  1. தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  2. சின்னவெங்காயம் - 4
  3. தக்காளி - 1 (சிறியது)
  4. சீரகம் - 1 தேக்கரண்டி                                  
தாளிக்க -
  1. ரிபைண்டு எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. மிளகாய்வத்தல் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது                                 
செய்முறை -
  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். துவரம் பருப்பை தண்ணீரில் கழுவி கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
  2. குக்கரில் துவரம் பருப்பை, 1 1/2 கப் தண்ணீர், மஞ்சள்தூள், காயம் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
  3. நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து உப்பு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து பின் மசித்த பருப்பில் போட்டு நன்கு கலந்து விடவும். சுவையான பருப்பு மசியல் ரெடி.
  5. இந்த பருப்புமசியல் புளிக்குழம்பு சாதம், ரசம் சாததத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சாதத்துடன் சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...