Friday, April 11, 2014

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                       
                                                                                                       

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை மாதத்தின் முதல் நாளை கொண்டாடும் விழாவாகும்.

தமிழ் புத்தாண்டு அன்று அனைவரும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் விளக்கேற்றி  வணங்கி விட்டு பிறகு கோவிலுக்கும் சென்று வருவார்கள்.

எல்லோரும் இந்த தமிழ் புத்தாண்டில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் அன்று முழுவதும் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். எல்லோருடைய வீட்டிலும் மதிய சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, கசப்பு என்ற சுவைகளில் வைத்து அசத்துவார்கள். சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, பாகற்க்காய் பொரியல் என்று வைப்பார்கள். சில வீடுகளில் கசப்பு சுவைக்கு வேப்பம் பூ ரசம் வைப்பார்கள்.

நம்முடைய வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு எல்லாம் கலந்த கலவை என்பதை நாம் உணர்ந்து அதை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இதை தவிர முருங்கைக்காய், மாங்காய், தக்காளி சேர்த்து செய்த சாம்பார், அவியல், வடை எல்லாம் செய்து குடும்பத்தினர் அனைவரும் மிகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

எங்கள் ஊரான பாளை பகுதியில் அவலை பாலில் ஊற வைத்து அதனுடன் தேங்காய் துருவல்.சீனி சேர்த்து செய்த அவலை சாமிக்கு படைத்து கும்பிடுவார்கள்.

எல்லோரும்  அவரவர் விருப்பப்படி சுவையாக சமைத்து தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் -

  1. சாம்பார்
  2. அவியல்
  3. சர்க்கரை பொங்கல்
  4. உளுந்த வடை
  5. கேசரி
  6. மாங்காய் தொக்கு

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...