Saturday, April 5, 2014

ராகி புட்டு / Ragi Puttu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ராகி மாவு - 1 கப் ( 200 கிராம் )
  2. சீனி ( சர்க்கரை ) - 100 கிராம் 
  3. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  4. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. தண்ணீர் - 200 மில்லி 
  6. உப்பு - 1 தேக்கரண்டி                              
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ராகி மாவைப் போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.                                                  
  2. 200 மில்லி தண்ணீரை லேசாக சூடு பண்ணவும். மாவு நன்றாக ஆறியதும் மாவுடன் உப்பு, எலக்காய்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
  3. பிறகு சுடு தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறவும். 15 நிமிடம் ஊற வைக்கவும்.      
  4. பின்னர் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸ்சியில் போட்டு எடுப்பதால் மாவு கட்டி விழாது.
  5. பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  6. கலக்கி வைத்துள்ள மாவை இட்லி தட்டில் பரப்பி வைக்கவும்.

  7. சீனியை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  8. அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புட்டு வைத்துள்ள இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும். புட்டு 10 நிமிடங்களில் வெந்து விடும்.
  9. புட்டு வெந்ததும் எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் பொடித்து வைத்துள்ள சீனியை சேர்த்து நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான ராகி புட்டு ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...