Wednesday, July 23, 2014

சிக்கன் பிரியாணி - 2 / Chicken Biriyani - Pakki Style

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. சிக்கன் - 250 கிராம்
  3. கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - 1/2 கப்
  4. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  6. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  9. தயிர் - 2 மேஜைகரண்டி
  10. எலுமிச்சைசை சாறு - 1 மேஜைக்கரண்டி
  11. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  12. பட்டை - 1
  13. கிராம்பு - 2
  14. நெய் - 2 மேஜைக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு
சாதம் வடிக்க -
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 3
  6. பிரிஞ்சி இலை - 2
  7. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
அரைக்க -
  1. இஞ்சி(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  2. பூண்டு(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 2
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி வெட்டி கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.
  4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
  5. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. அதன் பின் சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விடவும்.
  7. கொத்தமல்லி தழை, புதினா, தயிர் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி போட்டு வேக விடவும்.
  8. சிக்கன் வேகும் போதே மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, எண்ணெய் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 90% வெந்ததும் அதை வடித்து விடவும்.
  9. பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
  10. ஓவனை 350 F-ல் சூடு பண்ணவும். ஒரு பெரிய மூடி கொண்ட அகலமான அடிகனமான கடாயை எடுத்து கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ளவும். 
  11. பிறகு தயாராக இருக்கும் கிரேவியில் இருந்து சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து பரப்பி வைக்கவும்.
  12. பிறகு வடித்த சாதத்தை சிக்கன் துண்டுகள் மீது பரப்பி வைக்கவும்.
  13. அதன் மேல் மீதமுள்ள கிரேவியை ஊற்றவும். அதன் மேல் 2 மேஜைக்கரண்டி நெய்யை பரப்பி ஊற்றவும்.
  14.  பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
  15. அதை ஓவனில் 25 நிமிடம் வைக்கவும். பிறகு ஓவனில் இருந்து எடுத்து விடவும். ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...