Monday, July 1, 2013

இனிப்பு குழிப்பணியாரம்


பரிமாறும்அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி - 200 கிராம்
  2. இட்லி அரிசி - 200 கிராம்
  3. வெள்ளை முழு உளுந்து - 50 கிராம்
  4. தேங்காய் துருவல் - 200 கிராம்
  5. வெல்லம் (துருவியது)  - 200 கிராம் 
  6. நெய் - 50 கிராம்
  7. எண்ணெய் - 50 கிராம்
  8. உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை -
  1. பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஊறிய பின் நன்றாக கழுவி கொஞ்சமாக தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை 6 மணி நேரம் புளிக்க விடவும்.                       
  3. அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதை அரிப்பை வைத்து அரித்துக் கொள்ளவும்.
  4. அரைத்து வைத்திருக்கும் மாவில் பாகை ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  5. நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. அடுப்பில் பணியார கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணெயை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து ஒவ்வொரு குழிக்கும் ஊற்றவும்.
  7. நன்றாக சூடானதும் மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றி      மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கம்பி அல்லது ஸ்பூனால் மாற்றி போடவும்.          
  8.  இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள   மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இனிப்பு பணியாரம் ரெடி.
குறிப்புகள் -
  1. நான்ஸ்டிக் கடாயாக இருந்தால் திருப்பிப் போடும் போது மாவு ஒட்டாமல் நன்றாக வரும்.
  2. மாவை பணியார சட்டியில் ஊற்றுவதற்கு முன்னால் ஒரு முறை ருசி
    பார்த்துக் கொள்ளவும். இனிப்பு தேவைப்பட்டால் சர்க்கரை  சேர்த்துக்  கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...