Monday, May 13, 2013

ரசம் /Rasam


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புளி - எலுமிச்சை அளவு அல்லது புளி பேஸ்ட் - 5 மேஜைக்கரண்டி
  2. தக்காளி - 1 (சிறியது)
  3. மிளகு - 1 தேக்கரண்டி
  4. மல்லி - 1 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. பூண்டுப் பல் - 5
  7. காயம் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. மல்லித் தழை - சிறிது
  10. கறிவேப்பில்லை - சிறிது                                
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வற்றல் - 1
செய்முறை -
  1. புளியை 400 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அல்லது புளி பேஸ்டை 5 மேஜைக்கரண்டி எடுத்து 400 மில்லி தண்ணீரில் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
  2. தக்காளியை புளித் தண்ணீரில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மிளகு, மல்லி, சீரகம், பூண்டுப் பல் எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும். 
  4. தாளித்ததும் காயம், பொடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி புளித் தண்ணீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும். கறிவேப்பிலை, மல்லித் தழையை தூவி நுரை வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான ரசம் ரெடி.

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...