![]() |
திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு 511 வது தேரோட்டமாகும்.
இதை தொடர்ந்து நந்தி முன்பு உள்ள பெரிய கொடி மரத்தில் கோவில் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவனே போற்றி, இறைவா போற்றி என்று பக்தி கோஷங்களை பாடினார்கள். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது.
![]() |
25 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி காம தேனு வாகனத்தில் உலா வந்தார். 26 ஆம் தேதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்தார்.
27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.
29 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்த்தருளல், காலை 8 மணிக்கு நடராஜ பெருமாள் பச்சை எழுந்த்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்பாள் தங்கக்கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.
30 ஆம் தேதியான இன்று காந்திமதி அம்பாள் திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர பக்த்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
![]() |
இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை முதலான பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. எனவே குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்து கொண்டு தேரோட்டத்தை கண்டு களித்தனர்.
![]() |
இன்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வருக்கு என்று 5 தேர்கள் இழுக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு திருமதி காயத்ரி கிரிசின், திரு ஞானசம்பந்தம், திருமதி ஜனனி, பாம்பே சாரதா, பால சுந்தரம், வீரமணி, சகோதரிகள் சுபலட்சுமி, சுவர்ணலதா ஆகியோரின் கச்சேரி நடந்தது.
இன்று நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இனிதே முடிந்தது.
நன்றி
சாரதா