Wednesday, November 29, 2017

கேப்பை தோசை / கேழ்வரகு தோசை / Keppai Thosai / Kezhvaraku Dosai



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேப்பை - 3/4 கப்
  2. இட்லி அரிசி - 1/4 கப்
  3. உளுந்து - 1/4 கப்
  4. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. கேப்பை , இட்லி  அரிசி ,  உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊறிய பிறகு அதோடு உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு இதே போல் பொங்கி இருக்கும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து விடவும். வெந்ததும் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான கேப்பை தோசை ரெடி.
  4. கேப்பை தோசைக்கு காரச்சட்னி நன்றாக இருக்கும்.

Sunday, November 19, 2017

காலிபிளவர் சில்லி / Cauliflower Chilli


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 1/4 கிலோ 
  2. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
  3. அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி 
  4. கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  7. கலர் பொடி - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. காலிபிளவரை சிறுசிறு பூக்களாக பிரித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு  பாத்திரத்தை வைத்து அதில்  காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது  உப்பு சேர்த்து கொதிக்க   வைத்து  நன்றாக கழுவிக்கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவருடன் சோளமாவு ,அரிசி மாவு , கடலை மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
  4. இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.      
  5. மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் சில்லி  ரெடி. 

Wednesday, November 15, 2017

கேப்பை புட்டு / கேழ்வரகு புட்டு / Keppai Puttu / Kezhvaraku Puttu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேப்பை மாவு - 1 கப் 
  2. பொடித்த அச்சுவெல்லம் - 3/4 கப் 
  3. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  4. உப்பு - 1 தேக்கரண்டி 
  5. தண்ணீர் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேப்பை மாவை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  2. ஆறிய பிறகு அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், மற்றும் உப்பு  நன்றாக கலந்து வைக்கவும்.
  3. பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். 
  4. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் கேப்பை புட்டு மற்றும் வெல்லத்தூளை சேர்த்து  நன்றாக  கிளறவும். சுவையான கேப்பை புட்டு  ரெடி.

Saturday, November 11, 2017

பருப்பு ரசம் / Paruppu Rasam



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பருப்பு தண்ணீர் - 1/2 கப் (50 கிராம் துவரம் பருப்பை வேக வைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்)
  2. தக்காளி - 1
  3. புளி - சிறிய கோலி அளவு 
  4. மிளகு - 1 தேக்கரண்டி 
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. பூண்டு பற்கள் - 5
  7. மல்லித்தழை - சிறிது 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2.  மிளகு , சீரகம், பூண்டுப்பற்கள் மூன்றையும் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு கடுகு , காயம், வெந்தயம் போடவும். 
  4. கடுகு வெடித்தவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி புளித்தண்ணீரை ஊற்றவும்.
  5. ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றவும். நுரை கூடி வரும் போது கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பருப்பு ரசம் ரெடி.

Friday, November 3, 2017

திருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi


எங்கள் ஊரான திருநெல்வலியில் இந்த சொதி குழம்பு மிகவும் பிரபலமானதாகும். நிறைய வீடுகளில் அடிக்கடி சொதி குழம்பு செய்வார்கள். சில ஹோட்டல்களில் வெள்ளிக்கிழமை தோறும் சொதி குழம்பு தான் இருக்கும். இனி சொதி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  2. பீன்ஸ் - 4
  3. கேரட் - 1
  4. உருளைக்கிழங்கு - 1
  5. பச்சை மிளகாய் -2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டுப்பல் - 2
  8. லெமன் -சிறிய துண்டு 
  9. உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் - 1/2 மூடி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 10
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சியை துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். லெமனை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  2. தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கெட்டியான பால் எடுத்து தனியே வைக்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டாவது பால் எடுத்து தனியே வைக்கவும். மூன்றாவது முறையும் இதே போல் எடுத்து இரண்டாவது எடுத்த பாலோடு கலந்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து அதோடு பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி சேர்த்து வைத்துள்ள தேங்காய் பாலுடன் இஞ்சி சாறு, மற்றும்  உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  6. காய்கள் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு  சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான திருநெல்வேலி சொதி ரெடி.
  7. சொதி குழம்பு பிளைன் சாதம், பிரியாணி வகைகள், புலாவ் வகைகள், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...