பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- இட்லி அரிசி - ஒரு கப்
- பச்சரிசி - ஒரு கப்
- வெள்ளை முழு உளுந்து - 2 மேஜைக்கரண்டி
- சாதம் - 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- சோடா மாவு - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- கிரைண்டரில் சாதம், தேங்காய் துருவல், ஊற வைத்த அரிசி, உளுந்து அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். 8 மணி நேரம் மாவை புளிக்க விடவும்.
- சுடுவதற்கு முன்னால் உப்பு, சோடா உப்பை சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். மாவை சிறிது தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்.
- ஆப்பத்தை தேங்காய்பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment