Monday, October 30, 2017

பருப்பு துவையல் / Paruppu Thuvaiyal

தேவையான பொருட்கள் -
  1. துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  2. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  3. பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 2
  6. பூண்டு பற்கள் - 2
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே வைக்கவும். அதேபோல் துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  2. அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் கடாயில் தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து எல்லாவற்றையும் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறிய பிறகு அதனுடன் உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். பருப்பு துவையல் ரெடி. 
  4. வத்தக்குழம்பு வைக்கும் போது சைட் டிஷ்சாக வைக்கலாம். தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, October 26, 2017

நெல்லிக்காய் ஊறுகாய் / Amla Pickle



தேவையான பொருள்கள் -
  1. நெல்லிக்காய் - 10
  2. மிளகாய் தூள் - 2 மேஜைக்கரண்டி 
  3. கடுகு - 2 மேஜைக்கரண்டி 
  4. வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி 
  5. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. நல்லெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. நெல்லிக்காய்களை நன்கு கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்களில் வெந்து விடும்.
  2. வெந்த நெல்லிக்காய்களை சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு கையால் அழுத்தினால் நெல்லிக்காய் சிறு தூண்டுகளாகவும் கொட்டைகள் தனியாகவும் வந்து விடும்.
  3. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்து நின்றவுடன் தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.
  4. ஆறிய பிறகு பொடி பண்ணிக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், பெருங்காயத்தூள் போட்டு ஒரு நிமிடம் கிளறி அதோடு நெல்லிக்காய்களை சேர்த்து கிளறவும்.
  5. பிறகு அதனுடன் கடுகு தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.

Friday, October 6, 2017

மணியாச்சி முறுக்கு / Maniyachi Muruku



தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  2. பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  3. கடலைப்பருப்பு - 3/4 கப் ( 150 கிராம் )
  4. பாசிப்பருப்பு - 1/4 கப் ( 50 கிராம் )
  5. நெய் - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். நடுவில் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
      
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. ஆறிய பிறகு மிக்சியில் திரித்துக்கொள்ளவும்.
  4. அரைத்த மாவுடன் திரித்து வைத்துள்ள பருப்பு மாவு, நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும். இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்குகளை திருப்பி போடவும். 
  6. எண்ணெய் நுரைத்து வருவது  குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறம் ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும். 
  7. எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான மணியாச்சி முறுக்கு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...