பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- அவல் - 200 கிராம்
- ஜவ்வரிசி - 100 கிராம்
- காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
- அச்சு வெல்லம் - 400 கிராம்
- முந்திரிப்பருப்பு - 10
- காய்ந்த திராட்சை - 10
- நெய் - 50 கிராம்
- அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித் தனியாக ஒரு தம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் ஊற வைத்த அவலும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
- அவல் வெந்த்ததும் சர்க்கரைப் பாகை ஊற்றவும்.
- பாகு சேர்த்து வரும் போது காய்ச்சிய பால், முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
- சுவையான அவல் பாயாசம் ரெடி. ஜவ்வரிசி சேர்க்காமல் தனி அவலை வைத்தும் அவல் பாயாசம் செய்யலாம்.