Friday, May 30, 2014

சீடை / Seedai

  1. இட்லி அரிசி - 2 கப் ( 400 கிராம் )
  2. பாதியாக உடைத்த வெள்ளை உளுந்தம் பருப்பு - 100 கிராம் 
  3. பொட்டுக்கடலை - 50 கிராம் 
  4. வெண்ணெய் - 25 கிராம் 
  5. தேங்காய் துருவல் - 200 கிராம் 
  6. எள் - 2 மேஜைக்கரண்டி 
  7. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் தீயை சிம்மில் வைத்து உளுந்தம் பருப்பை போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  3. ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  5. பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மாவோடு உளுந்த மாவு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், வெண்ணைய், எள், சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
  6. பிறகு மாவை கொஞ்சம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். ரொம்ப உருட்டாமல் லேசாக உருட்டி போடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டி போடவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீடைகளை எடுத்து போடவும்.
  8. சீடைகள் பொன்னிறமானதும் எடுத்து வடிதட்டில் போடவும்.
  9. எண்ணெய் நன்கு வடிந்தவுடன் சீடைகளை எடுத்து காற்றுப்புகாத பாட்டில் அல்லது டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான சீடை ரெடி.

3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...