Thursday, May 29, 2014

சிக்கன் தம் பிரியாணி / Chicken Dum Biriyani

   
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருட்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/4 கப்
  3. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  4. நெய் - 1 மேஜைக்கரண்டி
ஊற வைப்பதற்கு -
  1. எலும்புடன் உள்ள பெரிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  5. சீரகப் பொடி - 1 மேஜைக்கரண்டி
  6. மல்லிப் பொடி - 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  8. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  10. நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  11. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/4 கப்
  12. பட்டை - 1
  13. கிராம்பு - 2
  14. உப்பு - தேவையான அளவு
  15. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
சாதம் வடிக்க -
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 5
  5. ஏலக்காய் - 3
  6. பிரிஞ்சி இலை - 2
  7. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. சிக்கனை கழுவி நன்றாக தண்ணீரை வடித்து விட்டு ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும். அல்லது பிரிட்ஜில் முந்துன நாள் இரவே ஊற வைக்கவும்.                     
  2. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்றாக ப்ரை செய்யவும். பிரவுன் கலராக வரும் வரை ப்ரை செய்யவும். அல்லது கடையில் கிடைக்கும் ரெடிமேட் பிரைட் ஆனியனை உபயோகபடுத்தலாம்.
  4. ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, எண்ணெய் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 70% வெந்ததும் அதை வடித்து விடவும். 
  5. பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
  6. ஓவனை 400 F-ல் (200 C) சூடு பண்ணவும். ஒரு பெரிய மூடி கொண்ட அகலமான அடிகனமான கடாயை எடுத்து கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த சிக்கன் மற்றும் மசாலா கலவையை சேர்த்து பரப்பி விடவும்.            
  7. பிறகு வடித்த சாதத்தை சேர்த்து அதன் மேல் ப்ரை செய்த வெங்காயம், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும். ஒரு மேஜைக்கரண்டி நெய்யை பரப்பி ஊற்றவும்.
  8. பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
  9. 400 F -ல் 30 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு 300 F -ல் (150 C) 30 நிமிடம் வைத்து ஓவனில் இருந்து எடுத்து விடவும். ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.                                                                                     
குறிப்புகள் -
  1. ஓவன் இல்லாவிட்டால் அடுப்பில் கடாயை வைத்து தீயை high-ல் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயை எடுத்து விட்டு ஒரு கனமான தோசை கல்லை வைக்கவும். மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். தோசை கல்லின் மீது கடாயை வைத்து 40 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். 15 நிமிடம் கழித்து கடாயை திறந்து மெதுவாக கிளறவும்.

2 comments:

  1. தம் பிரியாணி பண்ணியது கிடையாது. நீங்க சூப்பரா பண்ணி இருக்கீங்க...

    ReplyDelete
  2. வாவ் ...பிரமாதம் .. ஹோட்டல் பிரியாணி போலவே இருக்கு...சூப்பர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...