Thursday, December 19, 2013

பிசி பேலா பாத்/ Bisi Bela Bath

                         
பரிமாறும் அளவு  - 4 நபருக்கு

தேவையான பொருட்கள் -
  1. அரிசி - 200 கிராம் 
  2. துவரம் பருப்பு - 100 கிராம்
  3. கேரட் - 1
  4. பட்டாணி - 1/2 கப் 
  5. பீன்ஸ் - 15
  6. உருளைக்கிழங்கு - 1
  7. பெரிய வெங்காயம் - 1
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. வெல்லம் - சிறிது 
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - சிறிது
  12. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வற்றல் - 5
  2. கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
  3. பட்டை - 2
  4. கிராம்பு - 4
  5. கச கசா - 1 மேஜைக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  7. கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. நெய் - 1 மேஜைக்கரண்டி
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  5. மிளகாய் வற்றல் - 1
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி 500 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். 
  2. கேரட், உருளைக்கிழங்கை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.             
  3. குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த பட்டாணி உபயோகபடுத்தினால் முதல் நாள் இரவே ஊற வைத்திருக்க வேண்டும்.                                                                       
  4. புளியை சிறுது தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். 
  5. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, கச கசா, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  6. வறுத்தவற்றை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு அடிகனமான பாத்திரத்தில் மிக்சியில் உள்ள கலவை, புளி தண்ணீர், வெல்லம், உப்பு, கறிவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும். 
  8. கொதித்ததும் வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சாம்பார் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 நிமிடம் நன்றாக கொதித்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் மறுபடி கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். 
  10. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றவும். பிறகு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  11. தாளித்ததை சாதத்தில் சேர்த்து கிளறவும். சுவையான பிசி பேலா பாத் ரெடி. தயிர் பச்சடி, அப்பளத்துடன் பரிமாறலாம்.
குறிப்புகள் -
  1. வறுத்து அரைப்பதற்கு பதிலாக 3 மேஜைக்கரண்டி ரெடிமேட் பிசி பேலா பாத் பொடி வைத்தும் செய்யலாம். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...