பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 3
- மல்லிப்பொடி -2 மேஜைக்கரண்டி
- சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு

அரைக்க -
- தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- பச்சைமிளகாய் - 3
- தக்காளி - 1 சிறியது
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -
- குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்றாக ஆறிய பின் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

- தேங்காய், பச்சைமிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- மசாலாவாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
- கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான உருளைக்கிழங்கு கூட்டு ரெடி. சாம்பார் சாதம், பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.