![]() |
தேவையான பொருள்கள் -
- இட்லி அரிசி - 200 கிராம்
- துவரம் பருப்பு - 50 கிராம்
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- பாசிப்பருப்பு - 50 கிராம்
- சுரைக்காய் - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- மிளகாய் வத்தல் - 4
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- காயத்தூள் - சிறிது
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- சுரைக்காய், கறிவேப்பிலை, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
- பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- பிறகு அதனுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான அடை ரெடி. தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம்.