Monday, September 1, 2014

பருப்பு உருண்டை குழம்பு / Paruppu Urundai Kuzambu

                               
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 50 கிராம் 
  2. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  3. இட்லி அரிசி - 3 மேஜைக்கரண்டி 
  4. சோம்பு - 1 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 
  8. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு
  11. தேங்காய் துருவல் - 25 கிராம் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, இட்லி அரிசி, சோம்பு எல்லாவற்றையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு பருப்போடு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                       
  3. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  4. தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு போட்டு வதக்கவும். 
  6. வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
  7. நன்கு ஆறிய பிறகு சிறுசிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.                                                                           
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  10. ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். பருப்பு உருண்டையில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  11. மசாலா வாடை அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் பருப்பு உருண்டைகளை சேர்த்து ஒரு கொதி வந்தததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

7 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...