Wednesday, July 2, 2014

பிரட் உப்புமா / Bread Upma

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பிரட் துண்டுகள் - 6
  2. தக்காளி - 1
  3. லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி 
  4. தண்ணீர் - 100 மில்லி 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு                      
தாளிக்க -
  1. எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. இஞ்சி - 1/2 இன்ச் அளவு 
  7. கறிவேப்பிலை - சிறிது                            
செய்முறை -
  1. முதலில் பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக கட் பண்ணி  வைக்கவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.                                                                                 
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும்.
  5. இறுதியில் லெமன் ஜூஸ் ஊற்றி மல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பிரட் உப்புமா ரெடி.                                            

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...