Wednesday, January 28, 2015

வாழைக்காய் கத்தரிக்காய் கூட்டு / Raw banana Brinjal Kootu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் 
  1. வாழைக்காய் - 1
  2. கத்தரிக்காய் -2
  3. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  4. தக்காளி - 1
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. காயம் - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு                                                      
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கத்தரிக்காய், வாழைக்காய் இரண்டையும் பொடிதாக வெட்டி தண்ணீரில் போடவும்.
                                                                       
  2. கடலைப்பருப்பை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளியை பொடிதாக வெட்டி வைக்கவும்.                                                                                                 
  3. ஊறிய பருப்புடன் காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  4. மிக்ஸ்சியில் வெட்டி வைத்துள்ள தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
                                                                                   
  5. வாழைக்காய், கத்தரிக்காய், உப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். 
  6. வெந்தவுடன் அவித்து வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  7. கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
                                                                                    
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  9. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கூட்டில் ஊற்றவும். சுவையான வாழைக்காய், கத்தரிக்காய் கூட்டு ரெடி.

Thursday, January 15, 2015

தக்காளி கிச்சடி / Tomoto Kichadi

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 4
  2. சின்ன வெங்காயம் - 50 கிராம் 
  3. பச்சை மிளகாய் - 2
  4. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான  அளவு                                                            
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
  செய்முறை -
  1. முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
                                                                          
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, காயத்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.                                                                            
  4. பச்சை வாடை போனதும் அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.                                                                 
  5.  வெந்ததும் அதை சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு தக்காளி  கலவையுடன்  உப்பு சேர்த்து  மிக்ஸ்சியில் அரைக்கவும்.                                             
  6. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
  7. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கிச்சடியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி கிச்சடி ரெடி. இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, December 31, 2014

சிக்கன் ப்ரை / Chicken Fry

பரிமாறும்  அளவு  - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. சிக்கன் - 1/4 கிலோ 
  2. இஞ்சி  பூண்டு  விழுது  - 1 தேக்கரண்டி 
  3. தயிர்  -  50 கிராம் 
  4. லெமன் ஜூஸ்  -  2 மேஜைக்கரண்டி 
  5. சிக்கன் 65 பவுடர் - 1  மேஜைக்கரண்டி 
  6. மல்லித்  தழை - சிறிது 
  7. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  8. உப்பு  - தேவையான  அளவு 
செய்முறை -
  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். கழுவிய சிக்கன் மீது இஞ்சி  பூண்டு விழுது , தயிர், லெமன் ஜூஸ், சிக்கன் 65 பவுடர், உப்பு  எல்லாவற்றையும் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
                                                                       
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.
  3. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிக்கன் வேகும் வரை கிளறி  விடவும். சிக்கன் வேகும் போது தண்ணிர் விடும்.                                                   
  4. சிக்கன் வெந்து தண்ணிர் நன்றாக வற்றிய பிறகு அடுப்பை  சிறிது கூட்டி கொள்ளவும்.             
  5. இரு புறமும் நன்றாக சிவக்கும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.  
  6. மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் ப்ரை ரெடி. 

Friday, December 12, 2014

கேரட் கூட்டு / Carrot Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. துவரம்  பருப்பு - 50 கிராம் 
  3. சாம்பார்  பொடி - 2 மேஜைக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள்  தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய்  துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1 
  3. சின்ன வெங்காயம் - 5
                                                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். துவரம் பருப்புடன் காயம் சேர்த்து  குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில்  அரைத்துக்  கொள்ளவும்.                                                     

  2. அடுப்பில் கடாயை வைத்து கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக விடவும். கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு,மற்றும் சாம்பார் பொடி  சேர்த்து கொதிக்க விடவும்.                                                                                                                         

  3. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து  5 நிமிடம்  கொதிக்க விடவும்.                                     
  4.  தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.        
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் கூட்டு  ரெடி.

Wednesday, November 26, 2014

அரைக்கீரை பொரியல் / Araikeerai Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். 
  2. துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து   வைத்துக் கொள்ளவும்.                                                      
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.                                                       
  6. பிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.                                                                                      
  7. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி. 

Saturday, November 15, 2014

கேரட் சட்னி / Carrot Chutney

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. சின்ன வெங்காயம் - 10
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் - 2
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                          
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.                                                   

  3. பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி  வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். 
  4. அடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.

  6. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.                                                
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                  

Tuesday, November 4, 2014

வெங்காய குருமா / Onion kurma

                           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. கறிமசாலாத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 4
  3. ஏலக்காய் - 2
செய்முறை -
  1. முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                                                                    

  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறிமசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.        
Related Posts Plugin for WordPress, Blogger...