![]() |
தேவையான பொருள்கள் -
- தோசை மாவு - 1 கப்
- சிறிய தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும். மிளகாய் வத்தலை இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை வறுத்து தனியே வைக்கவும்.
- அதே எண்ணெயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், சிறிது உப்பு,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய பொருள்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தோசை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.