![]() |
தேவையான பொருள்கள் -
- வேக வைத்த சாதம் - 1 கப்
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும்.
- பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால் எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
- இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும்.
- காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.
- மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.