![]() |
பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- ராஜ்மா - 1 கப் ( 200 கிராம் )
- தக்காளி - 1
- இஞ்சி துருவியது - மேஜைக்கரண்டி
- பூண்டு துருவியது - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- ராஜ்மாவை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு ராஜ்மாவுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
- வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் துருவி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
- தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ராஜ்மா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்க்கவும்.
- மசாலா கெட்டியானதும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான ராஜ்மா மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.