![]() |
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பாஸ்மதி அரிசி - 150 கிராம்
- பட்டாணி - 100 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரிஞ்சி இலை - 1
- தேங்காய் துருவல் - 1 கப்
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து 400 மில்லி அளவுக்கு பால் எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்.
- பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.
- தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.
- நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான பட்டாணி புலாவ் ரெடி.