பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் !
![]() |
தேவையான பொருள்கள் -
- பிரட் துண்டுகள் - 4
- குடமிளகாய் - பாதி
- பட்டர் - 25 கிராம்
- பூண்டு பற்கள் - 2
- மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- வெங்காயத்தை நீள வாக்கிலும், குடமிளகாயை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து பட்டரை ஊற்றி சூடு பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட் மேலும் தேய்த்து விடவும்.
- பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட் மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் பண்ணி சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி ரெடி.