Pages

Friday, February 5, 2016

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு / Ponnangkanni Keerai Kottu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொன்னாங்கண்ணி கீரை - 2 கைப்பிடி அளவு 
  2. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  3. காயம் - 1/2 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 6
  4. மிளகாய் வத்தல் - 2
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. பூண்டு பற்கள் - 3
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும். பிறகு அதனுடன் கீரை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  4. கீரை வெந்த்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.

23 comments:

  1. ஒரு நாள் இது போல செய்து பார்க்கிறேன் அம்மா.. சூப்பர்..

    ReplyDelete
    Replies

    1. முதல் வருகைக்கு நன்றி அபி. கண்டிப்பாக செய்து பாரு நன்றாக இருக்கும்.

      Delete
  2. நான் வெறும் பருப்பு மட்டும் சேர்த்து செய்தது, தாங்கள் சொன்னது போல் அறைத்துகொட்டி செய்து பார்க்கிறேன்.
    தங்கள் விளக்கம் சூப்பர்,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  3. சத்தான பொன்னாங்கன்னி கூட்டு சூப்பர்.

    நான் வேற கீரையில் இப்படி செய்தேன். காய் கூட்டும் இது போல் செய்து இருக்கிறேன்.

    அருமை சகோ

    ReplyDelete
  4. சகோவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. மிக அருமையான குறிப்பு. தக்காளியையும் அரைத்துப்போட்டு சமைப்பது வித்தியாசமாக இருக்கிறது. விரைவில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் மனோக்கா. சுவை நன்றாக இருக்கும்.

      Delete
  6. இன்றுதான் முதன் முதலாய் தங்கள்
    பதிவுக்குள் வருகிறேன் என நினைக்கிறேன்
    படங்களும் செய்முறை விளக்கமும்
    மிக மிக அருமையாக உள்ளது.
    இனித் தொடர்ந்து வருவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  7. கீரை கூட்டு நன்றாக இருக்கு.

    தக்காளி வெங்காயம் அரைத்து செய்ததில்லை. முயற்சித்து பார்த்து சொல்றேன் மா.

    ReplyDelete
  8. இந்த முறையில் செய்து பாருங்கள் ஷமீ.

    ReplyDelete
  9. செய் முறை விளக்கம் அருமை
    இந்த பதிவை ரசிக்கிறேன்...
    இதை ஒருநாள் செய்து ருசிக்கிறேன்....

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எதற்கு அம்மா....

      Delete
  11. முதலிடத்தில் முளைக்கீரையையும், அடுத்த சாய்ஸாக அரைக்கீரையையும், எப்போதாவது பசலிக்கீரையையும், அவ்வப்போது மணத்தக்காளியும், மிக அரிதாக வெந்தயக் கீரையும் சமைப்போம். பொன்னாங்கண்ணி கீரை எப்போதோ சிறுவயதில் ஒருமுறை சாப்பிட்டதுண்டு.

    முளை, அரைக்கீரைகளில் இளசாய் இருக்கும் தண்டையும் நறுக்கிப் போடுவோம். இதில் வெறும் இலை மட்டும்தானா?

    அடுத்தமுறை பொன்னாங்கண்ணி கீரை வாங்கி இதுபோலச் செய்து பார்க்கிறோம்.

    ReplyDelete
  12. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  13. சூப்பர் வித்தியாசமான ஒரு உணவு...

    ReplyDelete