தேவையான பொருள்கள் -
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க -
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- முதலில் தக்காளியை கையால் மசித்து வைக்கவும். பிறகு தக்காளியுடன் 300 மில்லி தண்ணீர், மஞ்சள்தூள், காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- மிளகு, சீரகம், பூண்டுப்பல் மூன்றையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய்வத்தலை போடவும். பிறகு கடுகு போடவும்.
- கடுகு வெடித்தவுடன் தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு கலவையை சேர்த்து கிளறி அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றவும். ரசம் நுரை கூடி வரும் பொழுது மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- பிறகு ரசத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி ரசம் ரெடி.