பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- அரைக்கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.
- பிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.
- இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி.