Thursday, March 27, 2014

தயிர் சாதம் / Curd Rice



தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 100 கிராம் 
  2. தயிர் - 100 மில்லி 
  3. பால் - 100 மில்லி
  4. மல்லித் தழை - சிறிது
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய்  - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பச்சை மிளகாய் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் அரிசியை நன்றாக கழுவி 250 மில்லி தண்ணீருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. சாதம் நன்றாக ஆறிய பின் தயிர், பால் இரண்டையும் ஊற்றி ஒரு கரண்டியால் மசித்து வைக்கவும். ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை மிளகாய் வதங்கியதும் கலந்து வைத்துள்ள தயிர் சாதத்தை சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். 
  5. உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தயிர்சாதம் ரெடி. ஊறுகாய் அல்லது துவையலுடன் பரிமாறலாம்.

5 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...