தேவையான பொருள்கள் -
செய்முறை -
- பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். வெயில் இல்லாவிட்டால் அடுப்பில் கடாயை வைத்து பச்சரிசி, உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்து திரித்துக் கொள்ளவும்.
- கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து 50 மில்லி தண்ணீர் ஊற்றி பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை போட்டு 150 மில்லி அளவுக்கு பாகு காய்ச்சவும். அடுப்பை சிம்மில் வைத்து பாகு காய்ச்சவும்.
- கருப்பட்டி பாகை வடிகட்டியில் ஊற்றி வடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து வடி கட்டிய கருப்பட்டி பாகு மற்றும் பாதி அளவு நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் களி மாவை ஒரு குழம்பு கரண்டி வீதம் எடுத்து பாகின் மேல் தூவி கை விடாமல் கிளற வேண்டும்.
- இவ்வாறு மீதமுள்ள மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும்.
- கெட்டியாக மாவு சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய், நல்லெண்ணெய் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- கையில் லேசாக எண்ணையை தொட்டுக் கொண்டு மாவு சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும். இந்த அளவுக்கு 16 களி உருண்டைகள் வரும். சுவையான உளுந்தங்களி ரெடி.
- பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து மிசினில் திரித்து ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது உபயோகபடுத்திக் கொள்ளலாம்.
- தோல் உளுந்துக்கு பதிலாக வெள்ளை முழு உளுந்தும் உபயோகிக்கலாம்.
- உளுந்தங்களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.