Wednesday, September 18, 2013

சப்பாத்தி/ Chapathi

                                                                 
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கோதுமை மாவு - 1/4 கிலோ
  2. பால் - 100 மில்லி
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - 50 மில்லி
செய்முறை -
  1. தேவையான அளவு தண்ணீரை லேசாக சுட வைத்துக் கொள்ளவும். கை பொறுக்கும் அளவுக்கு சூடாக்கவும். பால் மிதமான சூட்டில் அல்லது ஆறிய பாலாக இருக்க வேண்டும்.
  2. வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பிறகு பாலை ஊற்றி கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை ஊற்றி மாவை நன்றாக பிசைந்து உருட்டிக் கொள்ளவும். 
  4. கடைசியாக ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி லேசாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. மாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டிக் கொள்ளவும்.
  6. ஒரு உருண்டையை எடுத்து பூரிக் கட்டையால் தேய்க்கவும். சிறிது கோதுமை மாவை இருபுறமும் தடவி தேய்க்கவும்.                                                                                 
  7. அடுப்பில் சப்பாத்திக் கல்லை வைத்து சூடானதும் சப்பாத்தியை போடவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். சிவந்து வரும் போது சுற்றி எண்ணெய் விடவும்.             
  8. சப்பாத்தி நன்கு வெந்ததும் எடுத்து விடவும். சுவையான சப்பாத்தி ரெடி. 

1 comment:

  1. Hi saratha , first time in ur blog.chapathi la milk sethu senjurukarathu super idea. naanum try pannanum..soft irukku :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...