பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையானபொருள்கள் -
- கோஸ் - 1/4 கிலோ
- துவரம் பருப்பு - 25 கிராம்
- கடலைப் பருப்பு - 25 கிராம்
- மிளகாய் வத்தல் - 2
- காயம் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் இரண்டையும் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து காயம் சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பருப்பை இட்லித் தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கோஸ், உப்பு மற்றும் கோஸ் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பருப்பை போட்டு 1 நிமிடம் கிளறவும்.
- பின்னர் வேக வைத்துள்ள கோஸை, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- கோஸ் பருப்பு உசிலி ரெடி. மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
துவரம்பருப்பை எப்படி சேர்க்கவேண்டும். சொல்லவில்லையே
ReplyDelete