முதலில் கடலைப்பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் பருப்பு மற்றும் தண்ணீரை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
நீராவி அடங்கியதும் தண்ணீரை நன்கு வடித்து பருப்பை சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறியதும் பருப்புடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கரகரப்பாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து பொடித்த வெல்லத்துடன் 25 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய பாகை மீண்டும் அதே பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு மேஜைக்கரண்டி நெய், பருப்புக்கலவை, ஏலக்காய்தூள் சேர்த்து பூரணம் கெட்டியாகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பூரணம் ரெடி.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4கப் தண்ணீர், உப்பு, ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
கொதித்த வெந்நீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும். மாவு கட்டி இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். மேல் மாவு ரெடி.
பெரிய எலுமிச்சை அளவுக்கு மாவை எடுத்து தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மாவை மூடி விட வேண்டும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டைகள வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். மோதக கொழுக்கட்டை ரெடி.
நல்ல குறிப்பு. நன்றி.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteLooks good and tempting :)
ReplyDeleteசாந்தி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteSuperb ....
ReplyDeleteஅருமைம்மா சதூர்த்தி அன்று செய்கிறேன்.
ReplyDeleteசரியா,
நன்றிமா